Saturday, October 3, 2009

எனக்கு நீண்ட நாள்களாக ஒரு சந்தேகம. எத்தனையோ பாடத் திட்டங்கள் வந்து போய் விட்டன. ஆனால் வகுப்பறையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. குழந்தைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் பாவம். ஆசிரியரும் சரி தாய் தந்தையரும் சரி... மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை
குழந்தைகளின் பண்புகள் என்னென்ன? அவர்கள் கற்கும் முறை என்ன? அவர்களுக்கு தகுந்தது போல் யாரும் நடந்து கொள்வதில்லை. வகுப்பறைகள் நடப்பது எல்லாம் முட்டாள்தனங்களே . இதோ சில எடுத்துக்காட்டுகள்.
  1. ஆசிரியர் ஒரு கதையை இரண்டு முறை வசித்து காட்டுகிறார். இரண்டு முறை விளக்கி சொல்கிறார். அப்புறம் குழந்தைகளிடம் வாசிக்கசொல்கிறார்.
    நான்கு முறை கேட்ட கதையை வாசிக்க அவர்களுக்கு விருப்பம் இருக்குமா?
  2. புத்தகத்தில் உள்ளதையே நோடுப்புதகதிலும் எழுதும்படி சொல்கிறார்.
  3. ஒரு வரியை வசித்து விட்டு குழந்தைகளை பார்த்து அதே வரியை வச்சிக்கிறார். அதுதான் அவர் கொடுக்கும் விளக்கம.
  4. ஒரு கணக்கை செய்து காட்டுகிறார். குழந்தைகளுக்கு புரியவில்லை. அவர்கள் சந்தேகம் கேக்கிறார்கள். ஆசிரியர் மீண்டும் அதே முறையில் செய்கிறார். அப்படி செய்த போதுதான் அவர்களுக்கு புரியவில்லை என்பதை அவர் கண்டுகொள்வதே இல்லை.
  5. நான்கோ ஐந்தோ வினாக்களுக்கு விடை எழுதி கொடுக்கிறார். அதில் இரண்டு மிக முக்கியம் என்கிறார். அப்படியானால் மீதி மூன்றை படிக்க வேண்டியதில்லையே
  6. போன வருடம் வகுப்பு எடுத்த போது பல பிரச்னைகள் ஏற்பட்டன. அப்படியானால் இந்த வருடம் போன வருடம் கற்பித்தது போல் கற்பிக்கக் கூடாதல்லவா?
இப்படி இன்னும் எத்தனயோ சொல்லலாம் குழந்தைகளின் கல்விமேல் அக்கறை உள்ளவர்கள் இதை பற்றி யோசியுங்கள்.
நன்றி
ராஜேந்திரன்

1 comment:

  1. I hope this is the beginning of a valuable series of articles on school education and child psychology. Good luck. Will keep following your ideas and posts.

    ReplyDelete