Saturday, October 17, 2009

சில எண்களும் சில எண்ணங்களும்

ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முப்பது
அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நான்கு
அவர்களின் மொத்த சம்பளம் சராசரி அறுபது ஆயிரம்
ஒரு குழந்தைக்கு இரண்டாயிரம்
அந்த பள்ளிக்கு எங்கள் ஆய்வுக்காக சென்று இருந்தேன்.
நான்காம் வகுப்பில் ஏழு குழந்தைகள். அவர்களுக்கு தமிழ் தெரியுமா என்று பரிசோதித்தேன். அவர்களின் புத்தகத்தை அவர்களால் வாசிக்க முடியாததை கண்டு மூன்றாம் வகுப்பு புத்தகத்தை கொடுத்தேன். அதையும் அவர்களால் வாசிக்க முடியவில்லை. அப்புறம் இரண்டாம் வகுப்பு புத்தகத்தை கொடுத்தேன்.
ஏழு பேரில் ஒரு குழந்தை தட்டு தடுமாறி வாசித்தது. "பரவைல்லையே நன்றாக வாசித்தாய்" என்றேன். "எங்க அப்பா எனக்கு சொல்லித்தரும்" என்றது அந்த குழந்தை.

மற்றொரு கணக்கு
பத்து வருடம் வேலை செய்த ஒரு ஆசிரியரின் ஒரு மாத சம்பளம் சராசரி பதினாறாயிரம். அவருடைய வேலை நாள்கள் மொத்தம் நூற்று எண்பது. அவருடைய ஒரு வருட சம்பளம் ஒரு லட்சத்து தொநூற்றி இரண்டாயிரம் அப்படியானால் அவருடைய ஒரு நாள் சம்பளம் ஆயிரத்து அறுபது ஆறு ரூபாய்.
அந்த ஒரு நாளில் அவருடைய வேலை நேரம் ஐந்து மணி நேரம். அதில் இரண்டு பிரிவேளை ஓய்வு கிடைக்கும். எனவே உண்மையான வேலை நேரம் மூன்றை மணி நேரம். எனவே ஒரு மணி நேரத்துக்கு அவருடைய சம்பளம் முன்னூற்றி ஐந்து ரூபாய். இதில் பல் நாள்கள் பல பிரிவேளை அவர் வகுப்புக்கு செல்வதுமில்லை. அப்படியே சென்றாலும் அங்கு எதுவும் செய்வதுமில்லை.
ஆனால் தேசிய தழில் உறுதி திட்டத்தில் வேலை செய்பவருக்கு நூற்றி அறுபது ஒரு நாள் கூலி என்று பொறாமை படுகிறார்.

மற்றொரு கணக்கு, ஆனால் எண்கள் இல்லாத கணக்கு

ஒரு கல்வித்துறை, அதற்கு ஒரு அமைச்சர், அலுவலகம், ஊழியர்கள் ...
டி டி ஆர் டி என்ற ஒரு நிறுவனம் அங்கும் இது போல அதிகாரிகள் ஊழியர்கள்...
ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி அலுவலகங்கள் அதிகாரிகள் ஊழியர்கள்...
உப மாவட்ட அளவிலும் கல்வி அலுவலகங்கள், அதிகாரிகள் ஊழியர்கள்...
இதனையும் எதற்காக... அவ்வொரு வகுப்பிலும் மூக்கொழிக்கியாபடி உக்கார்ந்திருக்கும் அந்த குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுக்க... ஆனால் அது மட்டும் நடப்பதில்லை.
வாழ்க நம் நாடு வாழ்க நம் மக்கள்
ராஜேந்திரன்

Wednesday, October 7, 2009

கேரளா மாமாவுக்கு அன்புடன்

எனக்கு வேறொரு பெயர் உண்டு. "கேரள மாமா'' என்னை இப்படி அழைப்பது என் நண்பன் ஜெயக்குமாரின் மகள். அவள் பெயர் " எழில் ஓவிய " எப்போதும துறு துறு என்று இருப்பாள். அவளுக்கு இப்போது முன்று அல்லது முன்றரை வயது தன் இருக்கும் . ஜெயக்குமார் என் பயிற்சியில் பங்கெடுத்து பங்கெடுத்து குழந்தைகளை கவனிப்பது அவர்களின் நடவடிக்கைகளில் ஆச்சரியப்படுவது என்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நாம் குழந்தைகளின் இயப்புகளை புரிந்து கொள்ளாமல் நம் விருப்பப்படி எப்படி வடைந்து கொள்கிறோம். அதனால் அவர்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சனைகள் வருகின்றன என்பதை நான் சொல்ல அதற்க்கான எடுதுக்கடுகளை அவர் தன்னுடைய அல்லது தன் நண்பர்களுடைய நடத்தைகளில் இருந்து கண்டுபிடித்து கூறுவார்.
நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியை கூறினார். இப்போது ஓவிய எதை கண்டாலும் எழுதவும் ( படம் வரைவது ) வாசிக்கவும் தொடங்கி உள்ளாள். அவள் பெயரை எப்படி எழுதுவாள் தெரியுமா? ஒ என ஆங்கிலத்தில் எழுதிவிட்டு விய என தமிழில் எழுதுவாள்.
அதைபார்த்த ஜெயக்குமார் ஆங்கிலத்தில் பெயர் எழுதி காண்பித்தார். அந்த பெயரை பார்த்த ஓவிய " கடைசியில் என் எ எழுதி இருட்க்கிறீர்கள். இது தப்பு. இதை ஒவியே என்று தானே வாசிக்க முடியும்?" என்று கேட்டாள்.
இதுதான் ஆங்கில எழுத்துக்களை முதலில் சொல்லிகொடுத்த பின் வாசிக்க செயும் போது உள்ள பிரச்சினை.
குழந்தைகள் எப்போதும் நேர்கொட்டுசிந்தனை உள்ளவர்கள். எ என்ற எழுத்தை சொல்லிகொடுத்த பின் இது ஆ என படிக்க வேண்டும் என்றால் அது குழந்தைக்கு சிக்கலாக மாறி விடுகிறது.
இப்போதும் எழுத்து சொல்லிக்கொடுத்த பிறகு தன் வாசிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவும்
அன்புடன்
ராஜேந்திரன்

Sunday, October 4, 2009

அவர்கள் மனதில் நாம் இல்லை

மொட்டு , மலர் வகுப்புட்களில் ( எல். கே. ஜி. யு. கே. ஜி ) படிக்கும் குழந்தைக்கு ஆசிரியர்கள் விந்தை கதைகளில் வரும் அதிசய சக்தி வாய்ந்த கதா நாயகர்கள் போல.
ஐந்து கூட்டல் முன்று சமம் ஒன்பது என எழுதி வந்த குழந்தைகளிடம் அப்பா சொன்னார். " ஐந்தும் முன்றும் கூடினால் ஒன்பது வராதம்மா எட்டு தான் வரும். " உடனே குழந்தை " போப்பா உனக்கு ஒன்றுமே தெரியாது. இது எங்க மிஸ் சொன்னது. ஐந்தும் முன்றும் கூடினால் ஒன்பது தான் வரும்."
நேரம் கிடைக்கும் போது டீச்சர் ஸ்டுடென்ட் விளையாட்டு விளையாடும். மிஸ்ஸை போலவே பேசும், நடக்கும், எல்லாம் செய்யும்.
அப்படி அவர்கள் மனதில் இடம் பிடித்த நாம் அவர்கள் நான்கு ஐந்து வகுப்புக்கு வரும்போது அவர்கள் மனதை விட்டு நீங்கியது ஏன்?
யோசிதிததுண்ட?
குழந்தைகள் நான்கு ஐந்து வகுப்புக்கு வரும் போது அவர்களுக்கு விமரிசன சிந்தனை வந்து விடுகிறது. நம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டை கண்டு கொள்கிறது. அவ்வளவுதான் நாம் அவர்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல நீங்க தொடங்குகிறோம். அவர்கள் கண்டுகொள்ளும் சில முரண்பாடுகள் இதோ
  1. வகுப்பில் கற்பிக்கும் எந்த தகவல்களையும் மறக்கக் கூடாது என்று சொல்கிறோம். ஆனால் அடுத்த நாள் நாம் அவர்களிடம் " நேற்றைக்கு எங்கே விட்டோம் " என்று கேட்கிறோம்.
  2. கைஎழுத்து சீர்பட இரட்டை வரி நான்கு வரி எழுத சொல்கிறோம். ஆனால் நம் கைஎழுத்து மிக மிக மோசமாக இருக்கிறது.
  3. குழந்தைகள் தாமதமாக வரும்போது தண்டனை கொடுக்கிறோம். ஆனால் நாம் பல வேளை தாமதமாய் வருகிறோம்.
  4. வாசிக்கும்போது தவறு வரக்கூடாது என்கிறோம் ஆனால் நம் வாசிப்பில் நிறைய தவறுகள் வருகின்றன.
  5. சரியாக திட்டமிடாமல் வகுப்புக்கு வந்து பல நேரம் குழந்தைகள் முன்னால் திணறுகிறோம்
  6. சில குழந்தைகளிடம் மட்டும் அன்புடன் நடந்து கொள்கிறோம். பிறரை கண்டுகொள்ளாமல் விடுகிறோம்.
  7. சிலவேளை சில குழந்தைகள் சந்தேகம் கேட்டால் நாம் கோபம் கொள்கிறோம். அல்லது " அது அப்படித்தான் என்றோ பெரிய வகுப்புக்கு போகும்போது தெரிந்துகொள்வாய் '' என்றோ சொல்லி சமாளிக்கிறோம்
  8. வகுப்பில் வேறு நல்ல ஆசிரியர்கள் வந்து சுவையாக வகுப்பெடுதிருப்பர்கள். நம்வகுப்பை அந்த நல்ல ஆசிரியரின் வகுப்போடு ஒப்பிட்டு பார்க்கிறது. நாமோ அந்தநல்ல ஆசிரியர் போல மாற முயற்சி செய்வதுமில்லை.
இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
குழந்தைகளுக்கு பிடித்த பாடம் எதுவென்று கேளுங்கள். ஏன் பிடித்து என்று கேளுங்கள். அந்த ஆசிரியரை பிடித்துதான் காரணம் என்பதை கண்டுகொள்ளலாம்
நாம் நம்மிடம் உள்ள சில குறைகளை நீக்கும் முயற்சியில் ஏற்ப்படுவோம். குழந்தைகளின் மனதில் இடம் பிடிப்போம்,
அன்புடன்
ராஜேந்திரன்

Saturday, October 3, 2009

எனக்கு நீண்ட நாள்களாக ஒரு சந்தேகம. எத்தனையோ பாடத் திட்டங்கள் வந்து போய் விட்டன. ஆனால் வகுப்பறையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. குழந்தைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் பாவம். ஆசிரியரும் சரி தாய் தந்தையரும் சரி... மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை
குழந்தைகளின் பண்புகள் என்னென்ன? அவர்கள் கற்கும் முறை என்ன? அவர்களுக்கு தகுந்தது போல் யாரும் நடந்து கொள்வதில்லை. வகுப்பறைகள் நடப்பது எல்லாம் முட்டாள்தனங்களே . இதோ சில எடுத்துக்காட்டுகள்.
  1. ஆசிரியர் ஒரு கதையை இரண்டு முறை வசித்து காட்டுகிறார். இரண்டு முறை விளக்கி சொல்கிறார். அப்புறம் குழந்தைகளிடம் வாசிக்கசொல்கிறார்.
    நான்கு முறை கேட்ட கதையை வாசிக்க அவர்களுக்கு விருப்பம் இருக்குமா?
  2. புத்தகத்தில் உள்ளதையே நோடுப்புதகதிலும் எழுதும்படி சொல்கிறார்.
  3. ஒரு வரியை வசித்து விட்டு குழந்தைகளை பார்த்து அதே வரியை வச்சிக்கிறார். அதுதான் அவர் கொடுக்கும் விளக்கம.
  4. ஒரு கணக்கை செய்து காட்டுகிறார். குழந்தைகளுக்கு புரியவில்லை. அவர்கள் சந்தேகம் கேக்கிறார்கள். ஆசிரியர் மீண்டும் அதே முறையில் செய்கிறார். அப்படி செய்த போதுதான் அவர்களுக்கு புரியவில்லை என்பதை அவர் கண்டுகொள்வதே இல்லை.
  5. நான்கோ ஐந்தோ வினாக்களுக்கு விடை எழுதி கொடுக்கிறார். அதில் இரண்டு மிக முக்கியம் என்கிறார். அப்படியானால் மீதி மூன்றை படிக்க வேண்டியதில்லையே
  6. போன வருடம் வகுப்பு எடுத்த போது பல பிரச்னைகள் ஏற்பட்டன. அப்படியானால் இந்த வருடம் போன வருடம் கற்பித்தது போல் கற்பிக்கக் கூடாதல்லவா?
இப்படி இன்னும் எத்தனயோ சொல்லலாம் குழந்தைகளின் கல்விமேல் அக்கறை உள்ளவர்கள் இதை பற்றி யோசியுங்கள்.
நன்றி
ராஜேந்திரன்