Saturday, October 17, 2009

சில எண்களும் சில எண்ணங்களும்

ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முப்பது
அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நான்கு
அவர்களின் மொத்த சம்பளம் சராசரி அறுபது ஆயிரம்
ஒரு குழந்தைக்கு இரண்டாயிரம்
அந்த பள்ளிக்கு எங்கள் ஆய்வுக்காக சென்று இருந்தேன்.
நான்காம் வகுப்பில் ஏழு குழந்தைகள். அவர்களுக்கு தமிழ் தெரியுமா என்று பரிசோதித்தேன். அவர்களின் புத்தகத்தை அவர்களால் வாசிக்க முடியாததை கண்டு மூன்றாம் வகுப்பு புத்தகத்தை கொடுத்தேன். அதையும் அவர்களால் வாசிக்க முடியவில்லை. அப்புறம் இரண்டாம் வகுப்பு புத்தகத்தை கொடுத்தேன்.
ஏழு பேரில் ஒரு குழந்தை தட்டு தடுமாறி வாசித்தது. "பரவைல்லையே நன்றாக வாசித்தாய்" என்றேன். "எங்க அப்பா எனக்கு சொல்லித்தரும்" என்றது அந்த குழந்தை.

மற்றொரு கணக்கு
பத்து வருடம் வேலை செய்த ஒரு ஆசிரியரின் ஒரு மாத சம்பளம் சராசரி பதினாறாயிரம். அவருடைய வேலை நாள்கள் மொத்தம் நூற்று எண்பது. அவருடைய ஒரு வருட சம்பளம் ஒரு லட்சத்து தொநூற்றி இரண்டாயிரம் அப்படியானால் அவருடைய ஒரு நாள் சம்பளம் ஆயிரத்து அறுபது ஆறு ரூபாய்.
அந்த ஒரு நாளில் அவருடைய வேலை நேரம் ஐந்து மணி நேரம். அதில் இரண்டு பிரிவேளை ஓய்வு கிடைக்கும். எனவே உண்மையான வேலை நேரம் மூன்றை மணி நேரம். எனவே ஒரு மணி நேரத்துக்கு அவருடைய சம்பளம் முன்னூற்றி ஐந்து ரூபாய். இதில் பல் நாள்கள் பல பிரிவேளை அவர் வகுப்புக்கு செல்வதுமில்லை. அப்படியே சென்றாலும் அங்கு எதுவும் செய்வதுமில்லை.
ஆனால் தேசிய தழில் உறுதி திட்டத்தில் வேலை செய்பவருக்கு நூற்றி அறுபது ஒரு நாள் கூலி என்று பொறாமை படுகிறார்.

மற்றொரு கணக்கு, ஆனால் எண்கள் இல்லாத கணக்கு

ஒரு கல்வித்துறை, அதற்கு ஒரு அமைச்சர், அலுவலகம், ஊழியர்கள் ...
டி டி ஆர் டி என்ற ஒரு நிறுவனம் அங்கும் இது போல அதிகாரிகள் ஊழியர்கள்...
ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி அலுவலகங்கள் அதிகாரிகள் ஊழியர்கள்...
உப மாவட்ட அளவிலும் கல்வி அலுவலகங்கள், அதிகாரிகள் ஊழியர்கள்...
இதனையும் எதற்காக... அவ்வொரு வகுப்பிலும் மூக்கொழிக்கியாபடி உக்கார்ந்திருக்கும் அந்த குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுக்க... ஆனால் அது மட்டும் நடப்பதில்லை.
வாழ்க நம் நாடு வாழ்க நம் மக்கள்
ராஜேந்திரன்

No comments:

Post a Comment