Wednesday, October 7, 2009

கேரளா மாமாவுக்கு அன்புடன்

எனக்கு வேறொரு பெயர் உண்டு. "கேரள மாமா'' என்னை இப்படி அழைப்பது என் நண்பன் ஜெயக்குமாரின் மகள். அவள் பெயர் " எழில் ஓவிய " எப்போதும துறு துறு என்று இருப்பாள். அவளுக்கு இப்போது முன்று அல்லது முன்றரை வயது தன் இருக்கும் . ஜெயக்குமார் என் பயிற்சியில் பங்கெடுத்து பங்கெடுத்து குழந்தைகளை கவனிப்பது அவர்களின் நடவடிக்கைகளில் ஆச்சரியப்படுவது என்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நாம் குழந்தைகளின் இயப்புகளை புரிந்து கொள்ளாமல் நம் விருப்பப்படி எப்படி வடைந்து கொள்கிறோம். அதனால் அவர்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சனைகள் வருகின்றன என்பதை நான் சொல்ல அதற்க்கான எடுதுக்கடுகளை அவர் தன்னுடைய அல்லது தன் நண்பர்களுடைய நடத்தைகளில் இருந்து கண்டுபிடித்து கூறுவார்.
நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியை கூறினார். இப்போது ஓவிய எதை கண்டாலும் எழுதவும் ( படம் வரைவது ) வாசிக்கவும் தொடங்கி உள்ளாள். அவள் பெயரை எப்படி எழுதுவாள் தெரியுமா? ஒ என ஆங்கிலத்தில் எழுதிவிட்டு விய என தமிழில் எழுதுவாள்.
அதைபார்த்த ஜெயக்குமார் ஆங்கிலத்தில் பெயர் எழுதி காண்பித்தார். அந்த பெயரை பார்த்த ஓவிய " கடைசியில் என் எ எழுதி இருட்க்கிறீர்கள். இது தப்பு. இதை ஒவியே என்று தானே வாசிக்க முடியும்?" என்று கேட்டாள்.
இதுதான் ஆங்கில எழுத்துக்களை முதலில் சொல்லிகொடுத்த பின் வாசிக்க செயும் போது உள்ள பிரச்சினை.
குழந்தைகள் எப்போதும் நேர்கொட்டுசிந்தனை உள்ளவர்கள். எ என்ற எழுத்தை சொல்லிகொடுத்த பின் இது ஆ என படிக்க வேண்டும் என்றால் அது குழந்தைக்கு சிக்கலாக மாறி விடுகிறது.
இப்போதும் எழுத்து சொல்லிக்கொடுத்த பிறகு தன் வாசிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவும்
அன்புடன்
ராஜேந்திரன்

No comments:

Post a Comment